ஷா ஆலம், செப் 29: உலு சிலாங்கூர் நாடாளுமன்றத்தில் மொத்தம் 20 இல்லத்தரசிகள் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் (SKSSR) கீழ் உதவி பெற்றனர். இத்திட்டத்திற்கு (ஒரு வருடம்) RM2,400 செலவிடப்பட்டது.
ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால் இல்லத்தரசிகளுக்கு முறையான பாதுகாப்பு கிடைப்பதை உறுதி செய்வதற்காக தனது தரப்பு திட்டத்தை ஸ்பான்சர் செய்துள்ளதாக உலு சிலாங்கூர் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் டாக்டர் சத்திய பிரகாஷ் நடராஜன் கூறினார்.
"பொதுவாக சிலாங்கூர் சகாட் வாரியம் மற்றும் சமூக நலத்துறை பற்றி மட்டுமே பொது மக்களுக்குத் தெரியும். அதே நேரத்தில் சமூகப் பாதுகாப்பு அமைப்பும் (Socso) இல்லத்தரசிகளுக்கான சிறப்புத் திட்டத்தைக் கொண்டுள்ளது.
எதிர்காலத்தில் இத்திட்டத்தின் கீழ் மேலும் பல இல்லத்தரசிகளுக்கு உதவி வழங்கவும் சத்திய பிரகாஷ் திட்டமிட்டுள்ளார்.
"நாங்கள் முதலில் 20 இல்லத்தரசிகளுக்கு நிதியுதவி செய்துள்ளோம். ஆனால், எதிர்காலத்தில் மேலும் பலர் பலன்களைப் பெறுவார்கள். கிராமத் தலைவர்கள் மற்றும் கவுன்சிலர்களுக்கு இத்திட்டத்தை சமூகங்களில் பரப்புவதற்கு நான் அழைப்பு விடுக்கிறேன்," என்று அவர் கூறினார்.
இறப்பு மற்றும் நோய்களுக்கு எதிராக பாதுகாப்பை வழங்கும் நோக்கத்துடன் ஆண்டுக்கு RM120 பங்களிப்புடன் கூடிய இத்திட்டம் முதலில் 1 டிசம்பர் 2022 வரை பதிவுக்கு. திறந்திருக்கும் .


