குளுவாங், செப் 14 - படிவம் ஆறு மாணவர்களுக்கான கொடுப்பனவு ஒதுக்கீட்டை கல்வி அமைச்சகம் 2025 பட்ஜெட்டில் (MOE) முன்மொழியும்.
படிவம் ஆறு மாணவர்களின் நலனை மேம்படுத்தவும் கல்வி அமைச்சு உறுதிபூண்டுள்ளது, அவர்கள் சரியான கல்வியைப் பெறுவது உறுதி செய்யப்படும் என அமைச்சர் ஃபத்லினா சிடேக் கூறினார்.
“இந்த ஒதுக்கீடு 2025 பட்ஜெட்டில் சேர்க்கப்படும். நிதி கிடைக்கிறதோ இல்லையோ, எல்லா மாணவர்களுக்காகப் போராடுவோம். கூடுதலாக, ஃபெடரல் உதவித்தொகையின் விரிவாக்கம் போன்ற பிற விஷயங்களையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.
"முன்னதாக, ஃ பெடரல் நிதியுதவி ஏழ்மை நிலையில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. ஆனால் அதிகமான மாணவர்கள் பயன்பெறும் வகையில் அதனை விரிவுபடுத்த நாங்கள் கோருகிறோம்," என்று அவர் கூறினார்.
முன்னதாக, நாட்டில் படிவம் ஆறு கல்வியை மாற்றியமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாகக் கொடுப்பனவை வழங்குவதற்கான முன்மொழிவை கல்வி அமைச்சு முன் எடுத்து வைத்ததாக அவர் விளக்கினார்.
- பெர்னாமா


