NATIONAL

226 குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது மழலையர் பள்ளிகள் இன்னும் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்படவில்லை

10 செப்டெம்பர் 2024, 4:43 AM
226 குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது மழலையர் பள்ளிகள் இன்னும் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்படவில்லை

ஷா ஆலம், செப் 10: சிலாங்கூரில் மொத்தம் 226 குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது

மழலையர் பள்ளிகள் இன்னும் சமூக நலத்துறையிடம்  (ஜேகேஎம்) பதிவு

செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குழந்தை பராமரிப்பு மையங்கள் அல்லது மழலையர் பள்ளிகளை உடனடியாக

பதிவு செய்ய ஊக்குவிப்பதற்காக தனது தரப்பு இப்போது தீவிரமாக செயல்பட்டு

வருவதாக ஜே.கே.எம் சிலாங்கூரின் தலைமை உதவி இயக்குனர் ரோஜியா உஸ்மான்

கூறினார்.

குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் மழலையர் பள்ளிகளை நடத்துபவர்களுக்கு

எப்படிப் பதிவு செய்ய வேண்டும் என்று ஜேகேஎம் மூலம் ஆலோசனை கூற

விரும்புகிறேன். 2025 ஆம் ஆண்டுக்கு பின் சிலாங்கூரில் பதிவு செய்யப்படாத குழந்தை

பராமரிப்பு மையங்கள் அல்லது மழலையர் பள்ளிகள் இருக்காது என்று நாங்கள்

நம்புகிறோம், என அவர் கூறினார்.

ஏற்கனவே இயங்கி வரும் குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் மழலையர் பள்ளிகளில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது உட்பட நிர்ணயிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு எப்போதும் இணங்குமாறு நினைவூட்டப்படுவதாக அவர் கூறினார்.

பதிவு செய்ய விரும்பும் அனைத்து குழந்தை பராமரிப்பு மையங்களும் அல்லது மழலையர்

பள்ளிகளும் சரியான இடத்தில் சிசிடிவி பொருத்த வேண்டும் மற்றும் அவை நன்றாக

வேலை செய்ய வேண்டும்,  என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.