ஷா ஆலம், செப் 10: இந்த ஆண்டு மாநிலம் முழுவதும் பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ மொத்தம் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை எம்பிஐ ஒதுக்கீடு செய்துள்ளது.
இதுவரை 50,000க்கும் மேற்பட்ட பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்க 500,000 ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளது என அதன் தலைவர் அஹ்மட் அஸ்ரி ஜைனல் நோர் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் மற்றும் உணவு கூடைகள் வடிவில் உதவி அனுப்பப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம் உலு சிலாங்கூர், சிப்பாங் மற்றும் தஞ்சோங் காராங் போன்ற முக்கிய பேரிடர் பகுதிகள் உதவி பெற்றுள்ளன.
"தற்காலிக தங்கும் மையங்களுக்கு (பிபிஎஸ்) , மினரல் வாட்டர், டோட்டோ, சானிட்டரி நப்கின், பெம்பர்ஸ் மற்றும் உலர் உணவுகள் போன்றவை அனுப்பப்படும்" என்று அவர் சிலாங்கூர் மீடியாவிடம் கூறினார்.
"பேரழிவில் சிக்கிய ஒரு வீட்டை மேம்படுத்துவதற்கான சராசரி செலவு RM20,000 முதல் RM40,000 வரை ஆகும்.
"பாதிக்கப்பட்டவர்களின் வீடு சேதமடைந்து, இனி குடியிருக்க முடியாத அளவுக்கு பேரழிவில் சிக்கி இருப்பதைக் கண்டால், அவர்களுக்கு சக்காட் வகாலா நிதி மூலம் புதிய வீடு கட்ட உதவி வழங்கப்படும்," என்று அவர் விளக்கினார்.


