ஷா ஆலம், ஆகஸ்ட் 30: இளம் தலைமுறையினர் பிரச்சனைகள் மற்றும் சவால்களை எதிர்கொள்வதில், அவற்றைத் தீர்ப்பதிலும் புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் கூறினார்.

தகவல் தொழில்நுட்பம் குறிப்பாக சமூக ஊடகங்களின் சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் அம்சங்களைக் கொண்ட புதிய வடிவிலான அச்சுறுத்தலுக்கு இளம் தலைமுறையினர் உள்ளாகுகின்றனர் என்று அவர் கூறினார்.

"எனவே, இளம் தலைமுறையினர் அனைத்து பிரச்சனைகளையும் சவால்களையும் புத்திசாலித்தனமாக எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்" என்று 2024 தேசிய தின கொண்டாட்டத்தை முன்னிட்டு அவர் தெரிவித்தார்.

மேலும், இளைய தலைமுறையினர் தேசபக்தி, சகிப்புத்தன்மை மற்றும் பரஸ்பர மரியாதை ஆகியவற்றை ஒற்றுமை, முழுமையான நல்லிணக்கம் மற்றும் எதிர்மறையான கூறுகள் இல்லாத வடிவத்தில் வெளிப்படுத்த வேண்டும் என்று சிலாங்கூர் சுல்தான் கூறினார்.

"இந்த சுதந்திரத்தின் உண்மையான அர்த்தத்தைப் மதிப்பதன் மூலம், ஒரு வளர்ந்த மற்றும் முற்போக்கான நாட்டை உருவாக்குவதற்கான தேசத்தின் மீதான  கட்ப்பாட்டை , பக்தியை மீண்டும் நிரூபிக்க முடியும்  என்று நான் நம்புகிறேன்," என்று அவர் கூறினார்.