NATIONAL

பெண்கள் முனைவர் அளவில் கல்வியை தொடர மாநில அரசு RM35,000 ஒதுக்கியுள்ளது

29 ஆகஸ்ட் 2024, 7:19 AM
பெண்கள் முனைவர் அளவில் கல்வியை தொடர மாநில அரசு RM35,000 ஒதுக்கியுள்ளது

ஷா ஆலம், ஆகஸ்ட் 29: முனைவர் அளவில் பாலின ஆய்வு கல்வியை தொடர உதவும் வகையில் வனிதா பெர்டாயா சிலாங்கூர் (டபிள்யூபிஎஸ்) உதவித்தொகை திட்டத்திற்கு மாநில அரசு மொத்தம் RM35,000 ஒதுக்கியுள்ளது.

21 முதல் 55 வயதுடைய தலைமைத்துவ அகாடமியின் (AKW) முன்னாள் மாணவர்கள் (பெண்கள் மற்றும் 21 முதல் 45 வயதுடைய மலேசிய குடிமக்களுக்கு ஆகஸ்ட் 31 வரை இச்சலுகை வழங்கப்படும் என மகளிர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்தார்.

“பாலின ஆய்வுத் துறையில் பிஎச்டி நிலைக்குத் தொடர்வது தொழில் வாய்ப்புகளை விரிவுபடுத்துவது மட்டுமல்லாமல், சமூகத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மாற்றத்தின் முகவராகவும் மாறுகிறது என அன்பால் சாரி தெரிவித்தார்.

“கல்வி, ஆராய்ச்சி, சமூகப் பணி, கொள்கை ஆலோசனை, அரசு சாரா நிறுவனங்கள் (என்ஜிஓக்கள்), பொது மற்றும் தனியார் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பாலினக் கல்வியின் முனைவர் பட்டதாரிகள் ஈடுபட வாய்ப்பு உள்ளது.

“பாலினப் பிரச்சனைகளில் நிபுணத்துவம், சமத்துவம் மற்றும் சமூக நீதி பற்றிய பிரச்சனைகளைப் புரிந்துகொள்வதில் உதவி தேவைப்படும் பல்வேறு தொழில்கள் பெருகிய உள்ளன,” என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.