தேசிய தினக் கொண்டாட்டப் பகுதிகளில் தாழ்வாகப் பறந்து பயிற்சியில் ஈடுபட்டு வரும் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, அரச மலேசியன் ஆகாயப்படை, அரச மலேசிய போலீஸ் படை விமானங்களுக்கு விபத்து ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதையும் இந்தத் தடை நோக்கமாகக் கொண்டுள்ளது.
பொதுமக்கள் அல்லது சொத்துக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் ட்ரோன்களைப் பறக்க விடுவது உட்பட எந்தவொரு விமான நடவடிக்கையும் 1969ஆம் ஆண்டு சட்டம் வான் போக்குவரத்துச் சட்டத்தின் 4வது பிரிவு மற்றும் மலேசிய சிவில் விமான போக்குவரத்து விதிமுறை 98, 140 முதல் 144 வரையிலான ஷரத்துகளின் கீழ் குற்றமாகும் என சி.ஏ.ஏ.எம். முகநூல் வழி நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இது குறித்து மேல் விபரங்களைப் பெற விரும்புவோர் drone.taskforce@caam.gov.my என்ற அகப்பக்கம் அல்லது www.caam.gov.my வாயிலாக தொடர்பு கொள்ளலாம்.


