NATIONAL

சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

20 ஆகஸ்ட் 2024, 2:42 AM
சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 20: சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகளுடன் மலேசிய குடிநுழைவுத்துறை சமரசம் செய்து கொள்ளாது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த ஜனவரி 1 முதல் ஆகஸ்ட் 16 வரை சட்டவிரோதக் குடியேறிகளை வேலைக்கு அமர்த்தியதற்காக உள்ளூர்வாசிகள் உட்பட 900 முதலாளிகள் கைது செய்யப்பட்டனர் என குடிவரவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ கூறினார்.

அதே காலகட்டத்தில், 11,903 சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டதாகவும், 106,432 இடங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் குடியேற்றச் சட்டம் மற்றும் பாஸ்போர்ட் சட்டத்தை மீறிய 29,030 சட்டவிரோதக் குடியேறிகள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

சட்டவிரோதக் குடியேறிகள் உணவகத்தில் வேலை செய்வது குறித்து பல புகார்கள் வந்துள்ளதாகவும், சரியான ஆவணங்கள் இல்லாத அல்லது நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் தங்கியிருக்கும் அவர்களை வேலைக்கு அமர்த்தும் முதலாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரஸ்லின் கூறினார்.

" சட்டவிரோதக் குடியேறிகளை ஒருபோதும் பணியமர்த்த வேண்டாம். இது குடியேற்றச் சட்டத்தின் கீழ் கடுமையான குற்றமாகும். யார் வேலைக்கு வந்தாலும் சரியான செயல் முறையைப் பின்பற்ற வேண்டும்" என முதலாளிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.