ALAM SEKITAR & CUACA

இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் நாளை பண்டமாரான் ஜெயாவில்  நடைபெறும்

17 ஆகஸ்ட் 2024, 3:24 AM
இலவச மருத்துவப் பரிசோதனை இயக்கம் நாளை பண்டமாரான் ஜெயாவில்  நடைபெறும்

ஷா ஆலம், ஆக. 17-  மாநில அரசின் ஏற்பாட்டிலான மருத்துவப் பரிசோதனை   பண்டமாரான் ஜெயா, கிள்ளான் அரச மாநகர் மன்ற மண்டபத்தில் நாளை 18ஆம் ஆம் தேதி  நடைபெறும். இந்த  இலவச மருத்துவ பரிசோதனை  இயக்கத்தில் பங்கேற்று பயனடையுமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

போர்ட் கிள்ளான் தொகுதி நிலையிலான இந்த சிலாங்கூர் சாரிங்  இயக்கம்   காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் என்று   தொகுதி சேவை மையம் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது.

உடல் பரிசோதனை, இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் உள்ளிட்ட சோதனைகளை உள்ளடக்கிய  இலவச சுகாதார  இயக்கத்தில் பங்கேற்று பயனடைவதற்கான  வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என அவர் கேட்டுக் கொண்டார்.

செலங்கா செயலியில் தொடக்க மதிப்பீட்டு பாரத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும்  இடர் மதிப்பீடு செய்யப்படுவதால் இந்த இயக்கத்தில் பங்குபெற விரும்புவோர்  அந்த செயலியில் முன்னதாக  பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யுமாறு ஜமாலியா பொது மக்களைக் கேட்டுக் கொண்டார்.

1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

2.  சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்

3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்

4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்

பதிவு செய்வதில்  ஏதேனும் சிக்கல்கள் இருந்தால் 1800226600 என்ற எண்ணில் செல்கேர் அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் முகநூல்  மூலம் தெரிவித்தார்.

இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை  தொடர மாநில அரசு  32  லட்சம் வெள்ளியை  ஒதுக்கியுள்ளதாக 2024ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்தபோது மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அறிவித்தார்.

குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.