NATIONAL

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உணவு வளாகம் சுத்தம் செய்யப்பட்டது

14 ஆகஸ்ட் 2024, 4:50 AM
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட உணவு வளாகம் சுத்தம் செய்யப்பட்டது

ஷா ஆலம், ஆகஸ்ட் 14: இரண்டு வாரங்களுக்கு முன்பு தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஜாலான் AU5, தாமான் லெம்பா கெராமாட்டில் உள்ள உணவு வளாகம் சுத்தம் செய்யப்பட்டது.

கடந்த ஞாயிறு வரை மேற்கொள்ளப்பட்ட துப்புரவு பணிக்கு கிட்டத்தட்ட RM15,000 செலவானது என அம்பாங் ஜெயா நகராண்மை கழகத் (எம்பிஏஜே) தலைவர் டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

"இப்போது வியாபாரிகள் எரிந்த இடத்தின் அருகே தற்காலிகத் தளத்தில் வியாபாரம் செய்யலாம். இந்த தற்காலிகத் தளம் வாகன நிறுத்துமிடம் ஆகும் மற்றும் போக்குவரத்திற்கு தடையாக இருக்காது.

"முதல் மூன்று மாதங்களுக்கு அவர்களிடம் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படாது, மேலும் அக்டோபர் மாதம் முதல் வசூலிக்கப்படும் RM310 தள வாடகையை மட்டுமே செலுத்த வேண்டும்," என்று அவர் சிலாங்கூர்கினியிடம் கூறினார்.

அனைத்து வர்த்தகர்களுக்கும் தற்காலிக தளத்தை சுத்தமாக வைத்திருக்கவும், விற்பனை நிலைய உபகரணங்களை விட்டுச் செல்ல வேண்டாம் என்றும் அவர் நினைவூட்டினார்.

ஜூலை 27 அன்று, ஜாலான் AU5, தாமான் லெம்பா கெராமாட்டில் 12 கடைகள் தீயில் எரிந்தன. இது உளவு வளாகத்தின் 80 சதவீதத்தை பாதித்தது.

எரிவாயு கசிவு ஏற்பட்டதால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.