NATIONAL

சிறிய தீ விபத்துக்குப் பிறகு ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.

4 ஆகஸ்ட் 2024, 12:41 PM
சிறிய தீ விபத்துக்குப் பிறகு ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி சேவை வழக்க நிலைக்கு திரும்பியது.

கோலாலம்பூர், ஆகஸ்ட் 4 - PWTC லைட் ரெயில் டிரான்சிட் (LRT) நிலையத்திற்கு அருகில் உள்ள பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறை சரிசெய்யும் பணி இன்று காலை முடிவடைந்துள்ளது.

ரேபிட் ரெயில் பேஸ்புக்கில் ஒரு அறிக்கையை வெளியிட்டது, பயண அட்டவணைகள் சரிசெய்யப் பட்டு, இதன் பின் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும்  என தெரிவிக்கப்பட்டது.

"மாற்று ரயில் மற்றும் ஷட்டில் பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. சிரமத்திற்கு வருந்துகிறோம். உங்கள் பொறுமைக்கு நன்றி" என்று நிறுவனம் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இன்று காலை 9.58 மணியளவில் தொழில் நுட்பக் கோளாறு காரணமாக அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் எல்ஆர்டி பாதையில் சேவை தாமதங்களை, அந்த  விரைவு ரயில் நடத்துனர் நிர்வாகம் முன்பு அறிவித்திருந்தது. விசாரணையில், சிறிய தீ விபத்து காரணமாக பாதையில் உள்ள ஒரு கூறு பாதித்திருந்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.