NATIONAL

இன்று நூர் ஃபாரா கொலை வழக்கின் சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப் படுவார்

26 ஜூலை 2024, 3:10 AM
இன்று நூர் ஃபாரா கொலை வழக்கின் சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப் படுவார்
இன்று நூர் ஃபாரா கொலை வழக்கின் சந்தேக நபர் நீதிமன்றத்தில் குற்றஞ் சாட்டப் படுவார்

கோலாலம்பூர், ஜூலை 26: இன்று கோலா குபு பாரு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நூர் ஃபாரா கார்தினி அப்துல்லா கொலை வழக்கின் சந்தேக நபர் குற்றஞ்சாட்டப்படுவார்.

அந்த 26 வயதன சந்தேக நபர் மீது குற்றவியல் சட்டத்தின் 302 வது பிரிவின் கீழ் கொலைக் குற்றத்திற்காக இன்று குற்றம் சாட்டப்படும் என்று சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் டத்தோ ஹுசைன் ஓமர் கான் பெர்னாமாவிடம் தெரிவித்தார்.

நூர் ஃபாரா கார்தினி (25), ஜூலை 10 அன்று காணாமல் போனதாகக் கூறப்பட்டது. ஐந்து நாட்களுக்குப் பிறகு உலு சிலாங்கூரில் உள்ள செம்பனை தோட்டத்தில் அவரது உடல் மாலை 6 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டது.

பேராக்கில் காவல்துறை அதிகாரியாகப் பணிபுரியும் சந்தேக நபர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.