NATIONAL

நூர் ஃபாரா கார்தினி குடும்பத்தினருக்கு சுல்தான் பகாங் மற்றும் தெங்கு அம்புவான் இரங்கல் தெரிவித்தனர்

19 ஜூலை 2024, 6:44 AM
நூர் ஃபாரா கார்தினி குடும்பத்தினருக்கு சுல்தான் பகாங் மற்றும் தெங்கு அம்புவான் இரங்கல் தெரிவித்தனர்

குவாந்தான், ஜூலை 19: மறைந்த நூர் ஃபாரா கார்தினி அப்துல்லாவின் குடும்பத்தினர் அனைவருக்கும் பகாங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுடின் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கண்டாரியா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

சுல்தான் இட்ரிஸ் ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகத்தின் (உப்ஸி) முன்னாள் மாணவரான நூர் ஃபாரா கார்தினியின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்பதாகவும் பகாங் சுல்தானின் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டது.

"அனைத்து குடும்ப உறுப்பினர்களும் இந்த சோதனையை எதிர்கொள்ள தைரியமாக இருக்கட்டும். அல்-ஃபாத்திஹா" என்று செய்தியில் கூறப்பட்டுள்ளது.

நேற்று மாலை 5.20 மணியளவில் நூர் ஃபாரா கார்தினியின் உடல் கம்போங் நியூர் மானிஸ், பெக்கனில் உள்ள கல்லறையில் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது.

நூர் ஃபாரா கார்தினி (25) ஜூலை 10 ஆம் தேதி காணாமல் போனதாகக் கூறப்பட்ட நிலையில் ஜூலை 15 ஆம் தேதி மாலை 6 மணியளவில் கம்போங் ஸ்ரீ கிளேடாங், உலு சிலாங்கூரில் உள்ள செம்பனை தோட்டத்தில் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின் கீழ் வழக்கு விசாரணையில் உதவுவதற்காகப் பேராக்கில் பணிபுரியும் காவல்துறை அதிகாரியான 26 வயது நபர் கைது செய்யப்பட்டு ஜூலை 22 வரை தடுப்பு காவலில் வைக்கப்பட்டார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.