NATIONAL

அரசு ஊழியர்களுக்கான சம்பள சீரமைப்பு முறை அடுத்த மாதம் அறிவிக்கப்படும்

11 ஜூலை 2024, 2:18 AM
அரசு ஊழியர்களுக்கான சம்பள சீரமைப்பு முறை அடுத்த மாதம் அறிவிக்கப்படும்

ஷா ஆலம், ஜூலை 11: அடுத்த மாதம் அரசு ஊழியர்களுக்கான சம்பள சீரமைப்பு முறையும், பொது சேவை இழப்பீட்டுத் திட்டமும் (எஸ்எஸ்பிஏ) ஒரே நேரத்தில் அறிவிக்கப்படும்.

மேலும், 19வது பொதுச் சேவை பிரதமர் கவுன்சிலுடன் இணைந்து இந்த விவகாரம் அறிவிக்கப்படும் என்று பிரதமர் துறை அமைச்சர் (கூட்டாட்சி பிரதேசங்கள்) டாக்டர் ஜாலிஹா முஸ்தபா தெரிவித்தார்.

எஸ்எஸ்பிஏவை செயல்படுத்துவது தொடர்பான சுற்றறிக்கையை பொது சேவைத் துறை வெளியிடும் என்று அவர் நாடாளுமன்ற இணையதளத்தில் வெளியிட்ட பதிலில் தெரிவித்தார்.

மேற்கொள்ளப்படும் சாத்தியக்கூறு ஆய்வு உட்பட அரசு ஊழியர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான வழிமுறைகள் குறித்து பாகோ    நாடாளுமன்ற உறுப்பினர் டான்ஸ்ரீ முஹ்யிடின் யாசினின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மே 1 அன்று, நாட்டின் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 13 சதவீதம் அதிகரிப்புடன் அரசு ஊழியர்களுக்கான சம்பள மாற்றத்தை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.

அதுமட்டுமில்லாமல், நிதி அமைச்சராகவும் இருக்கும் அவர், அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச வருமானம் RM1,795யாக இருப்பது நியாயமானதல்ல என்று வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.