NATIONAL

சிலாங்கூரில் நீர் சேமிப்பு அளவு உயரும்

4 ஜூலை 2024, 9:39 AM
சிலாங்கூரில் நீர் சேமிப்பு அளவு உயரும்

ஷா ஆலாம், ஜூலை 4: நீர் சேமிப்பு அளவு 2023ல் 13.8 சதவீதத்திலிருந்து 2025க்குள் 15.6 சதவீதமாக உயரும் என டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

முதல் சிலாங்கூர் திட்டத்தின் (RS-1) மத்திய கால மதிப்பாய்வை முன்வைத்த அவர், மாநிலத்தின் திட்டங்களில்  நீர் வழங்கல் திட்டத்திலும் 1.8 சதவிகிதம் வரம்பை கடந்துள்ளது என்றார்.

உடைந்த குழாய்களின் எண்ணிக்கையைக் குறைக்க வருவாய் அல்லாத தண்ணீரை (NRW) குறைப்பது மற்றும் பழைய குழாய்களை மாற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகளால் விநியோக இடையூறு புகார்களைக் கையாள்வதற்கான முயற்சிகளும் உந்தப் பட்டதாக அவர் கூறினார்.

"இந்த தொடர் முயற்சியின் விளைவாக, மாநில அரசு ஒவ்வொரு மணி நேரமும் சுத்தமான தண்ணீர் கிடைக்கும் இலக்கை அடைந்தது" என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தில் அவர் கூறினார்.

அதே நேரத்தில், மூல நீர் ஆதாரங்கள் மாசுபடுவதால் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நீண்ட கால மற்றும் குறுகிய காலத்திற்கு நிறுத்தப்படுவதை சமாளிக்க நீர் உத்தரவாதத் திட்டம் (SJAM) உதவியது என அமிருடின் கூறினார்.

இத்திட்டம் இரண்டு கட்டங்களை உள்ளடக்கியது, அதாவது சுங்கை சிலாங்கூரில் மாசுபாட்டைக் கையாள்வது (இந்த ஆண்டின் இறுதியில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது) மற்றும் வறட்சியை எதிர்கொள்ளும் போது போதுமான அளவு மூல நீரை உறுதி செய்தல் ஆகியவை ஆகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.