NATIONAL

நாட்டில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் சரிவு

3 ஜூலை 2024, 4:41 AM
நாட்டில் புதிதாகப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையில் சரிவு

ஷா ஆலம், ஜூலை 3: நாட்டில் பிறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 2012ஆம் ஆண்டிலிருந்து குறைந்துள்ளதாகப் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலேசிய புள்ளியியல் துறை வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நாட்டின் 2010இல் 2.1 சதவீதக் குழந்தைகள் இருந்த நிலையில் 2022இல் அவை 1.6ஆகக் குறைந்துள்ளது என்று டத்தோஸ்ரீ நான்சி சுக்ரி கூறினார்.

"தற்போது, கருவுறுதல் விகிதங்கள் குறைந்து வருவது உலகளாவிய பிரச்சனையாக மாறியுள்ளது, குறிப்பாக வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் ஆகும்.

"கருவுறுதல் விகித வீழ்ச்சிக்குப் பங்களிக்கும் பல்வேறு காரணிகளில் பொருளாதாரம் மற்றும் வாழ்க்கை முறையும் அடங்கும். அதில் திருமண செய்து கொள்ளும் வயது, குழந்தையின்மை பிரச்சனை உட்பட குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவை வாழ்க்கை முறையைப் பாதிக்கும் காரணங்களாக அமைகின்றன," என்று அவர் மக்களவை அமர்வில் கூறினார்.

மேலும் கருத்து தெரிவித்த நான்சி, குழந்தையின்மை பிரச்சனையை சமாளிக்க ஷா ஆலமில் தேசிய கருவுறுதல் மையம் ஒன்றை நிறுவுவது உட்பட பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

இந்த மையம் நவீன சிகிச்சை வசதிகள் மற்றும் மலிவு விலையில் கருவுறுதல் சேவைகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது மற்றும் மலேசியாவில் கருவுறுதல் சேவைகளுக்கான பரிந்துரை மையமாக மாறும் என்று அவர் விளக்கினார்.

"மேலும், தேசிய மக்கள் தொகை மற்றும் குடும்ப மேம்பாட்டு வாரியம் (LPPKN) மூலம் அமைச்சகம் 1979 முதல் நியாயமான விலையில் கருவுறுதல் சிகிச்சை சேவைகளை வழங்குகிறது.

"மேலும், ஆலோசனை சேவைகள் உட்பட சுகாதாரப் பரிசோதனை சோதனைகளை வழங்கும் ஆண்கள் நல்வாழ்வு மருத்துவமனையும் உள்ளது," என்று அவர் கூறினார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.