NATIONAL

அபாகா தேசியப் பள்ளியில் தீ விபத்து

23 ஜூன் 2024, 6:43 AM
அபாகா தேசியப் பள்ளியில் தீ விபத்து

தவாவ், ஜூன் 23: நேற்று நள்ளிரவு 12 மணியளவில் அபாகா தேசியப் பள்ளியில் மரக் கட்டிடத் தொகுதி தீயில் எரிந்து நாசமானது.

நான்காம் ஆண்டு முதல் ஆறாம் ஆண்டு வரையிலான மூன்று வகுப்புகள் தீப்பிடித்து நாசமாயின என தவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஜாஸ்மின் ஹுசின் கூறினார்.

"எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை மற்றும் தீ விபத்துக்கான காரணம் இன்னும் தவாவ் தீயணைப்பு துறையின் விசாரணையில் உள்ளது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இதற்கிடையில், தவாவ் நகரிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சம்பவம் நடந்த இடத்திற்கு 28 பேர் கொண்ட குழுவினர் அவசர அழைப்பு வந்தவுடன் விரைந்தனர் என தவாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர் ஜெமிஷின் உஜின் கூறினார்.

நள்ளிரவு 1.23 மணியளவில் தீ வெற்றிகரமாக அணைக்கப்பட்டது.

– பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.