NATIONAL

பள்ளி நிகழ்வுகளுக்கு உணவு தயாரிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மறுபரிசீலனை

14 ஜூன் 2024, 2:54 AM
பள்ளி நிகழ்வுகளுக்கு உணவு தயாரிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மறுபரிசீலனை

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 14: பள்ளிகள் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளுக்கு உணவு தயாரிப்பதற்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்ய சிலாங்கூர் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

கடந்த வாரம் கோம்பாக்கில் நச்சுணவு சம்பவம் குறிப்பிடுகையில், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், மாணவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

"பள்ளி சிற்றுண்டிசாலைகளில் வழக்கமான ஆய்வுகளை சிலாங்கூர் மாநில சுகாதாரத் துறை மேற்கொள்கிறது. ஆனால், கோம்பாக்கில் உணவு பள்ளிக்கு வெளியில் தயாரிக்கப்பட்டுள்ளது.

"எனவே, ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நிகழும்போது, அது மீண்டும் நிகழாமல் இருக்க வழிகாட்டுதல்கள் மற்றும் நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதை பரிசீலிக்க சூழ்நிலை ஏற்படுகிறது" என்று அவாம் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.

உணவு வழங்குபவரைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்குமாறும்,  உணவின் தரத்தை கவனித்துக் கொள்ளுமாறும் ஜமாலியா சமூகத்திற்கு அறிவுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.