NATIONAL

RM140,036 மதிப்புடைய 26,000 கிலோகிராம் புரத மாவு பறிமுதல்

13 ஜூன் 2024, 6:53 AM
RM140,036 மதிப்புடைய 26,000 கிலோகிராம் புரத மாவு பறிமுதல்

ஷா ஆலம், ஜூன் 13: கடந்த திங்கட்கிழமை நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட RM140,036 மதிப்புடைய 26,000 கிலோகிராம் புரத மாவை போர்ட் கிள்ளானில் சிலாங்கூர் மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவை (மகிஸ்) துறை கைப்பற்றியது.

பிற்பகல் 3 மணியளவில் கிடங்கில் மேற்கொண்ட பரிசோதனையைத் தொடர்ந்து ஒரு கொள்கலன் பறிமுதல் செய்யப்பட்டது என்று அதன் பணிப்பாளர் முகமட் சோப்ரி முகமட் ஹாஷிம் கூறினார்.

"தவறான ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படுவதால், அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன," என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி அனுமதிப் பத்திரத்தில் உள்ள ஆலை எண் தகவல் வர்த்தகத்தில் உள்ள பெட்டியைப் போன்றே இல்லை. எனவே, தவறான தகவலைச் சமர்ப்பித்ததற்காக மலேசிய தனிமைப்படுத்தல் மற்றும் ஆய்வு சேவைகள் சட்டம் 2011 இன் பிரிவு 13 இன் கீழ் வழக்கு விசாரிக்கப்பட்டது என்று முகமட் சோப்ரி கூறினார்.

"குற்றம் நிரூபிக்கப்பட்டால் RM50,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்" என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.