NATIONAL

சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

11 ஜூன் 2024, 6:55 AM
சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட 12 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர்

குவாந்தான், ஜூன் 11: ஜாலான் குவாந்தான்-செகாமாட், ரொம்பின் என்ற இடத்தில் சுற்றுலா பேருந்து விபத்துக்குள்ளானதில் மொத்தம் 12 பேர் இன்னும் ரொம்பின், சிகாமட் மற்றும் மலாக்கா ஆகிய மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பாதிக்கப்பட்டவர்களில் எட்டு ஆசிரியர்கள், இரண்டு குமாஸ்தாக்கள், ஒரு இல்லத்தரசி மற்றும் ஒரு மாணவி அடங்குவதாக ரோம்பின் மாவட்ட காவல் துறைத் தலைவர் டிஎஸ்பி நோர் அஸ்மான் யூசோப் தெரிவித்தார்.

"பாதிக்கப் பட்டவர்களில் ஐந்து பேர் குவாந்தானில் உள்ள தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பிறர், முவாத்லாம் ஷா மருத்துவமனை, ரோம்பின் (ஒன்று), செகாமட் மருத்துவமனை, ஜோகூர் (இரண்டு), மலாக்கா மருத்துவமனை (ஒன்று) மற்றும் தனியார் மருத்துவ மையங்களில் (மூன்று) சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். .

தேசிய பள்ளி மூத்த உதவியாளர் ஜெராம் ஹஸ்னதுல் அடிலா ஹசன் (48), இரண்டாவது பேருந்து ஓட்டுநர் ஹாடி அசிரஃப் மட் இட்ரிஸ் (29), பள்ளி செயல்பாட்டு உதவியாளர் ஹம்சா அஹ்மட் (60) மற்றும் ஆசிரியர் டஹ்லியா அகமட் (52) ஆகியோர் இச்சாலை விபத்தில் உயிரிழந்தனர்.

இரண்டு ஓட்டுநர்கள் உட்பட 39 பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு வளையங்களை ஏற்றிச் சென்ற டிரெய்லர் மீது மோதியதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.