கோத்தா கினபாலு, ஜூன் 10 - அரசாங்கத்தின் இலக்கு மானியங்கள் கசிவைக் குறைப்பது, மக்களுக்கான உதவிகளை அதிகரிப்பது.
மானியத்தை சரியான முறையில் விநியோகம் செய்வதன் மூலம் ஏற்படும் சேமிப்பு, மக்களின் வருவாயை அதிகரிக்க உதவ வேண்டும். அதே வேளையில் மானியங்கள் பொறுப்பற்ற கட்சிகளின் கைகளுக்கு கிட்டாமல் இருப்பதை அரசு உறுதி செய்யும் என்றார்.
டீசல் மானிய கசிவுகள் மற்றும் கடத்தல்களில் நாடு தினமும் RM1.25 மில்லியன் இழக்கிறது என்று சாலைப் போக்குவரத்து துறை தெரிவித்ததாக ஃபஹ்மி கூறினார், இந்த கணிசமான தொகையானது மக்களுக்கான உதவித் திட்டங்களுக்கு நிதி அளிக்க பயன்படுத்தலாம் என்று அவர் கூறினார்.
“நேற்றிரவு 4,800 லிட்டர் டீசலை நிரப்பி கடத்த முயன்ற லாரி பிடிபட்டதாக கூறப்படுகிறது. இலக்கு நிர்ணயிக்கப்பட்ட டீசல் மானியம் மாலை 5 மணிக்கு அறிவிக்கப்பட்ட போதிலும், நள்ளிரவில் டீசல் திருட முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,'' என்றார்.
சபா மற்றும் லாபுவானுக்கான தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சிறந்த சேவை விருது வழங்கும் விழாவில் 69 பணியாளர்கள் விருதுகளைப் பெற்ற நிகழ்வில் ஃபஹ்மி இவ்வாறு கூறினார்.
- பெர்னாமா


