NATIONAL

கோலாலம்பூர் காவல்துறையின் சோதனை நடவடிக்கையில் 9,427 சம்மன்கள் வழங்கப்பட்டன

7 ஜூன் 2024, 9:15 AM
கோலாலம்பூர் காவல்துறையின் சோதனை நடவடிக்கையில் 9,427 சம்மன்கள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர், ஜூன் 7: செவ்வாய்க்கிழமை தொடங்கிய கோலாலம்பூர் காவல்துறையின் `` Operasi Hormat Undang-undang Jalan Raya`` சோதனை நடவடிக்கை மூலம் நேற்று வரை பல்வேறு குற்றங்கள் தொடர்பான 9,427 சம்மன்கள் வழங்கப்பட்டன.

அதே நடவடிக்கையில் 25 நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் கோலாலம்பூர் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் தலைவர் ஏசிபி சரிபுடின் முகமட் சலே கூறினார்.

"மஞ்சள் நிற இடத்தில் வாகனத்தை நிறுத்துவது, ஓட்டுநர் உரிமம் இல்லாதது மற்றும் வாகனத்தின் அமைப்பு அல்லது உபகரணங்களை மாற்றியமைத்தல், விவரக்குறிப்புகளுக்கு இணங்காத நம்பர் பிளேட்கள், பக்க கண்ணாடிகள் மற்றும் பிரேக் விளக்குகள் வேலை செய்யாதது ஆகியவை குற்றங்களில் அடங்கும்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையில் 1,500க்கும் மேற்பட்ட அதிகாரிகள், காவல்துறை பணியாளர்கள் மற்றும் கோலாலம்பூர் நகர மன்றம் மற்றும் சாலை போக்குவரத்து துறை போன்ற பிற அமலாக்க முகவர்களும் ஈடுபட்டுள்ளனர்.

இந்த சோதனை நடவடிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) முதல் ஜூன் 15 வரை மேற்கொள்ளப்படும் என்று கோலாலம்பூர் காவல் துறைத் தலைவர் டத்தோ ருஸ்டி முகமட் இசா அறிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.