கோலாலம்பூர், மே 29- சிலாங்கூரில் நிகழ்ந்த பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் திட்டமிட்ட குற்றச் செயல் கும்பலின் மேலும் பத்து உறுப்பினர்களை அரச மலேசிய போலீஸ் படைத் தேடி வருகிறது.
உள்ளடக்கிய டி.ஆர். என அக்கும்பல் அறியப்படுகிறது என்று புக்கிட்
அமான் குற்றப்புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது
சுஹைலி முகமது ஜைன் கூறினார்.
வந்துள்ளது. இக்கும்பல் போதைப் பொருள் கடத்தல், மிரட்டிப் பணம்
பறித்தல், கொலை, தீயிடல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது
காவல் துறையின் விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று அவர்
தெரிவித்தார்.
கடந்த மே மாதம் 3ஆம் தேதி ஓப்ஸ் லீமா என்ற பெயரில் சிலாங்கூர்,
ஜோகூர், பகாங் ஆகிய மாநிலங்களில் போலீசார் அதிரடிச் சோதனையை
மேற்கொண்டு 26 முதல் 51 வயது வரையிலான 18 திட்டமிட்ட குற்றச்
செயல் கும்பல் உறுப்பினர்களை சொஸ்மா எனப்படும் 2012ஆம் ஆண்டு
பாதுகாப்பு குற்றச் சட்டத்தின் (சிறப்பு நடவடிக்கைகள்) கீழ் தடுத்து
வைத்துள்ளனர் என்றார் அவர்.
கும்பலின் உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரை நாங்கள்
அடையாளம் கண்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
தண்டனைச் சட்டத்தின் 130வி பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படவுள்ளனர்
என்றும் அவர் சொன்னார்.
தேசிய இருதய சிகிச்சைக் கழகத்தில் சிகிச்சைப் பெற்று வருவதால்
அவர்களில் ஒருவருக்கு எதிராக இன்று குற்றஞ்சாட்டப் படவில்லை என்று
அவர் தெரிவித்தார்.
நடவடிக்கைகளை காவல் துறை தொடர்ந்து மேற்கொண்டு வரும் என்றும்
அவர் கூறினார்.


