ஷா ஆலம், மே 13: மலேசியன் டிஜிட்டல் எக்கனாமி கார்ப்பரேஷன் (எம்டிஇசி) நடத்திய ``eUsawan`` திட்டத்தின் மூலம் மொத்தம் 103,858 சிலாங்கூர் தொழில்முனைவோர் பயிற்சி பெற்றனர்.
இத்திட்டம் 2015 முதல் செயல் படுத்தப்பட்டது. இது வருமானம் ஈட்டவும், தயாரிப்புகளை மேம்படுத்தவும் மற்றும் விற்பனையை அதிகரிக்கவும் டிஜிட்டல் தொழில்துறையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என அதன் தலைவர் சையட் இப்ராஹிம் சையட் நோ கூறினார்.
"இந்த eUshaawan திட்டத்தின் மூலம், உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs), தொழில்நுட்பம் மற்றும் தொழிற்கல்வி பயிற்சி (TVET) மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோர் என மொத்தம் 563,543 பேருக்கு எம்டிஇசி வெற்றிகரமாகப் பயிற்சி அளித்தது.
EXCO இன்னோவேஷன் கலாச்சாரம் டாக்டர் முகமது ஃபஹ்மி நகாவால் இன்று நிறைவு செய்யப்பட்ட சாயா டிஜிட்டல்@ஷா ஆலம் சுற்றுப்பயணத்தின் தொடக்க விழாவில் அவர் பேசினார்.
டிஜிட்டல் திறமை மற்றும் போட்டித்தன்மையுள்ள சமுதாயத்தை உருவாக்குவதற்கான முயற்சியில் முழுமையான மற்றும் நிலையான டிஜிட்டல் பொருளாதார சூழலை வழங்குவது முக்கியம் என்று சையட் இப்ராஹிம் கூறினார்.
" தொழில்துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் டிஜிட்டல் தொழில்நுட்ப திறமைகளின் நிலையான விநியோகத்தை உறுதிசெய்யவும் ஒரு கட்டமைக்கப்பட்ட திட்டத்தை எம்.டி.இ.சி. செயல்படுத்தியுள்ளது.
"பள்ளி அளவில் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் திறமை மேம்பாட்டு திட்டங்களில், ஆகஸ்ட் 2016இல் தொடங்கப்பட்ட ``MyDigitalMaker`` அடங்கும்.
"கடந்த ஆண்டு டிசம்பர் வரை, நாடு முழுவதும் 2.5 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இத்திட்டம் பொது, தனியார் மற்றும் கல்வித் துறைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரின் கூட்டு முயற்சியாகும்," என்று அவர் கூறினார்.


