கோலாலம்பூர், மே 12: நாட்டில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் மற்றும் அவரின் துணைவியாரும் இணைந்து அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மாமன்னரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ஒரு பதிவின் மூலம், அன்னையர் தின வாழ்த்துக்களை தெரிவித்தனர்
"அன்பான மனைவி மற்றும் குழந்தைகளுக்குச் சிறந்த தாய் என பெர்மைசூரி அவர்களின் தியாகத்தையும் அன்பையும் மாமன்னர் சித்தரித்தார்.
"மேலும், இந்த நாளில் மறைந்த தன் தாயை நினைவு கூர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
– பெர்னாமா


