NATIONAL

மரம் விழுந்த சம்பவத்தில் ஒருவர் இறந்தார், மற்றொருவர் காயம்

8 மே 2024, 6:25 AM
மரம் விழுந்த சம்பவத்தில் ஒருவர் இறந்தார், மற்றொருவர் காயம்

கோலாலம்பூர், மே 8 : ஜாலான் சுல்தான் இஸ்மாயில் பகுதியில் பெய்த கனமழை மற்றும்

வீசிய பலத்த காற்றின் காரணமாக 17 வாகனங்கள் மீது மரம் விழுந்த சம்பவத்தில் ஒருவர்

இறந்தார், மற்றொருவர் காயமடைந்தார்.

இச்சம்பவம் தொடர்பான தகவல் மதியம் 2.19 மணிக்குக் கிடைத்ததாகவும், மொத்தம் 27

அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு

அனுப்பப்பட்டதாகவும் அறிக்கை ஒன்றில் கோலாலம்பூர் செயல்பாட்டு மையம்

தெரிவித்துள்ளது.

"சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​​​சாலையில் மரம் விழுந்து 17 வாகனங்கள் மற்றும்

மோனோ ரயில் பாதையை சேதமாக்கியது கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தால்

சாலையோரத்தில் உள்ள பேருந்து நிறுத்தங்கள் போன்ற பொது வசதிகளும்

சேதமடைந்தன.

"இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் அவ்விடத்தை விட்டு நீக்கப்பட்டுள்ளனர்.

அதாவது மலேசிய சுகாதார அமைச்சகத்தால் (கேகேஎம்) 47 வயதான ஒருவர் இறந்தது

உறுதி செய்யப்பட்டது மற்றும் 26 வயது நபர் ஒருவர் காயமடைந்தார். அந்நபரும்

இறந்தவரின் சடலமும் கேகேஎம் துணை மருத்துவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது" என்று

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.