NATIONAL

ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் உள்ளூர் சமூகத்தைச் சந்திப்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்

3 மே 2024, 3:39 AM
ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் உள்ளூர் சமூகத்தைச் சந்திப்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்

உலு சிலாங்கூர், மே 3: கோலா குபு பாருவின் இடைத்தேர்தல் பிரச்சாரம் தொடங்கி ஏறக்குறைய ஒரு வாரமாகியும், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளர் உள்ளூர் சமூகத்தைச் சந்திப்பதில் இன்னும் உற்சாகமாக இருக்கிறார்.

இங்குள்ள ராசா 22 உணவகத்தில் சுமார் 30 வாடிக்கையாளர்கள் மற்றும் வர்த்தகர்களுடன் மிகவும் நட்பாக 31 வயதான பாங் சோக் தாவ் நேரத்தைச் செலவிட்டார்

"எத்தனை வாக்காளர்களை அணுகியுள்ளேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் ஒவ்வொரு நாளும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை, என்னை ``வேட்பாளர் எண் 2`` என்று அறிமுகப்படுத்திக்கொண்டு வாக்காளர்களைச் சந்திக்க முடிந்த அனைத்தையும் செய்கிறேன்.

"அரசாங்கத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பின் உணர்வால் இந்த இடைத்தேர்தல் மூலம் இவ்விடத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். பிரச்சாரம் மற்றும் இளைஞர்கள் மீது கவனம் செலுத்துவதே முக்கியமாகும். நாங்கள் கொண்டு வரும் திட்டங்களை எதிர்காலத்தில் நான் விளக்குவேன்," என்று அவர் கூறினார்.

கோல குபு பாரு சட்டமன்ற உறுப்பினரான லீ கீ ஹியோங் புற்றுநோய் காரணமாகக் கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.