NATIONAL

தேசிய மொழியில் தேர்ச்சி பெறத் தவறும் காரணத்தால் பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் நிராகரிக்க முடியாது

25 ஏப்ரல் 2024, 2:52 AM
தேசிய மொழியில் தேர்ச்சி பெறத் தவறும் காரணத்தால் பாஸ்போர்ட்  விண்ணப்பத்தையும் நிராகரிக்க முடியாது

புத்ராஜெயா, ஏப் 25: வாடிக்கையாளர் தேசிய மொழியில் தேர்ச்சி பெறத் தவறும்

காரணத்தால் எந்தவொரு பாஸ்போர்ட் விண்ணப்பத்தையும் குடிவரவு அதிகாரிகள்

நிராகரிக்க முடியாது என குடிவரவுத் துறை இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின்

ஜுசோவ் கூறினார்.

குடிவரவு அதிகாரிகள் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவதில் குறிப்பாக

விண்ணப்பத்தை உறுதிப்படுத்த பல்வேறு அம்சங்களில் சோதனைகளை

மேற்கொள்வார்கள் என்று அவர் கூறினார்.

ஆனால், மதிப்பாய்வு தொழில் ரீதியாகவும் விவேகமாகவும் செய்யப்பட வேண்டும்.

"வாடிக்கையாளர்களுக்கு நல்ல சேவையை வழங்குவதற்கு குடிவரவுத் துறை

உறுதிபூண்டுள்ளது மற்றும் அத்துறையால் நிர்ணயிக்கப்பட்ட நிலையான செயல்பாட்டு

நடைமுறைகளின் கீழ் வாடிக்கையாளர்களை நடத்துமாறு அனைத்து அதிகாரிகளுக்கும்

எப்போதும் நினைவூட்டப்படுகிறது," என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

முன்னதாக, யுடிசி பினாங்கில் மலாய் மொழி பேச தெரியாமல் ஒருவர் தனது தாயின்

பாஸ்போர்ட்டை புதுப்பிக்க முடியாமல் போனது குறித்த செய்தி முகநூல் பக்கத்தில்

வைரலானது.

கடந்த திங்கட்கிழமை பினாங்கு யுடிசி அலுவலகத்தில் அந்நபர் பாஸ்போர்ட்டை

புதுப்பித்ததாக ரஸ்லின் தெரிவித்தார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.