NATIONAL

ருவாங் எரிமலையின் வெடிப்பால் ஏற்பட்ட காற்று மாசுபாடு சபா மற்றும் சரவாக்கில் காற்றின் தரத்தை பாதிக்கவில்லை

19 ஏப்ரல் 2024, 4:17 AM
ருவாங் எரிமலையின் வெடிப்பால் ஏற்பட்ட காற்று மாசுபாடு சபா மற்றும் சரவாக்கில் காற்றின் தரத்தை பாதிக்கவில்லை

கோத்தா கினாபாலு, ஏப் 19: இந்தோனேசியாவின் வடக்கு சுலவாசியில் உள்ள ருவாங் எரிமலையின் வெடிப்பால் ஏற்பட்ட காற்று மாசுப்பாடு சபா மற்றும் சரவாக்கின் மேற்பரப்பில் காற்றின் தரத்தை பாதிக்கவில்லை.

கடந்த செவ்வாய்கிழமை காலை 9.45 மணியளவில் கடல் மட்டத்திலிருந்து 725 மீட்டர் உயரத்தில் எரிமலை வெடித்ததால் உருவான தூசி மேகத்தால் சம்பந்தப்பட்ட இரு மாநிலங்களில் விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) இயக்குநர் ஜெனரல் முஹம்மது ஹெல்மி அப்துல்லா தெரிவித்தார்.

"வெடிப்பின் உயரம் 55,000 அடி வரை உள்ளது, மேலும் உருவாகும் தூசி மேகம் விமானத்தின் பாதுகாப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும். ருவாங் எரிமலை வெடிப்பின் தாக்கத்தை மெட்மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும்" என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

எரிமலை வெடிப்பின் எச்சரிக்கை நிலையை இந்தோனேசியா 4க்கு உயர்த்தியுள்ளது என்றும் எரிமலை தொடர்ந்து அவ்வப்போது வெடிக்கலாம் என்றும் அவர் விளக்கினார்.

"அதிகாரப்பூர்வ வலைத்தளம், myCuaca பயன்பாடு மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மெட்மலேசியா வழங்கும் தகவல்களைப் பற்றி பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அவர் கூறினார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.