NATIONAL

வெள்ளத்தால் கோலா சிலாங்கூர் மற்றும் சுங்கை பூலோவில் இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் திறப்பு

17 ஏப்ரல் 2024, 4:47 AM
வெள்ளத்தால் கோலா சிலாங்கூர் மற்றும் சுங்கை பூலோவில் இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் திறப்பு

ஷா ஆலம், ஏப் 17: நேற்று மதியம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, தாமான் செளஜானா அமான், கோலா சிலாங்கூர் மற்றும் கம்போங் குபு காஜா, சுங்கை பூலோவைச் சுற்றியுள்ள 88 குடும்பங்களைச் சேர்ந்த 403 பேர் பாதிக்கப்பட்டனர்.

இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, மெர்பாவ் செம்பாக் பள்ளியிலும், கோல்ஃபீல்ட்ஸ் டேசா எம்பிகேஎஸ் மண்டபத்திலும் முறையே இரண்டு தற்காலிகத் தங்கும் மையங்கள் திறக்கப்பட்டதாக மலேசிய சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் உதவி இயக்குநர் கூறினார்.

"பிபிஎஸ் மெர்பாவ் செம்பக்கில் 27 முதியவர்கள், 11 கைக்குழந்தைகள் மற்றும் 3 மாற்றுத்திறனாளிகள் உட்பட 364 பேர் தஞ்சமடைந்துள்ளனர். மேலும், மற்றொரு பிபிஎஸ் 38 பாதிக்கப்பட்டவர்களைக் கொண்டுள்ளது.

நேற்று மாலை முதல் தனது தரப்பினர் மீட்புப் பணிகளையும், வெள்ளக் கண்காணிப்புப் பணிகளையும் மேற்கொள்ள 40 பணியாளர்களையும், படகுகள் உட்பட 11 கருவிகளையும் திரட்டியுள்ளனர்.

"புக்கிட் ஜெலுதோங், சுங்கை பூலோ, ரவாங் மற்றும் பெஸ்தாரி ஜெயா ஆகிய தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையங்களிலிருந்து உறுப்பினர்களைத் திரட்டப்பட்டனர்," என்று அவர் கூறினார்.

நேற்று, கம்போங் மேலயு சுபாங் மற்றும் டேனாய் ஆலம் ஆகியவை அருகிலுள்ள ஆற்றில் ஏற்பட்ட நீர் பெருக்கத்தால் வெள்ளத்தில் மூழ்கின

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.