ECONOMY

லண்டனுக்கு விமான பயணப் பாதையை  மாற்றியமைக்கிறது   மாஸ்

14 ஏப்ரல் 2024, 7:40 AM
லண்டனுக்கு விமான பயணப் பாதையை  மாற்றியமைக்கிறது   மாஸ்

கோலாலம்பூர், ஏப்ரல் 13 – மத்திய கிழக்கில் தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தின் மத்தியில் ஈரான் வான்பரப்பை தவிர்ப்பதற்காக மலேசியன் ஏர்லைன்ஸ் (MAS) கோலாலம்பூருக்கும் லண்டனுக்கும் இடையிலான விமானங்களின் வழித்தடத்தை மாற்றுகிறது.

"நாங்கள் ஈரானிய வான்வெளியிலிருந்து திசை திருப்புகிறோம் மற்றும் தவிர்க்கிறோம்," என்று தேசிய விமான நிறுவனம் பெர்னாமா விடம் கூறியது.

மாஸ், ஏர் இந்தியா, ஆஸ்திரேலியாவின் குவாண்டாஸ் மற்றும் ஜெர்மன் லுப்தான்சா  ஆகியவை ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் என்ற அச்சத்தின் காரணமாக விமான  தடங்களை தற்காலிகமாக மாற்றியமைத்த முதல் சில விமான நிறுவனங்களில் அடங்கும்.

ஜெர்மன் பிரஸ் ஏஜென்சி (டிபிஏ) அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் வெள்ளிக்கிழமை கூறியதாக," ஈரான் இஸ்ரேலுக்கு எதிராக விரைவில் தாக்குதலைத் தொடங்கும் என்று எதிர்பார்க்கிறேன்." தெஹ்ரானின் திட்டங்கள் குறித்து வாஷிங்டனுக்கு ரகசிய உளவுத்துறை தகவல்  கசிவு எப்படி என்பதை விவரிக்க விரும்பவில்லை என்று  ஜோ பிடன் கூறினார் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 1 ஆம் தேதி சிரியாவில் உள்ள ஈரான் தூதரக வளாகத்தில் பல ராணுவ ஜெனரல்கள் கொல்லப் பட்டதைத் தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஈரானின் அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது.

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) வளைகுடாவில் இஸ்ரேலுடன் தொடர்புடைய கொள்கலன் கப்பலை கைப்பற்றியதாக செய்திகள் வந்தன.

ஏர் ஏசியாவைப் பொறுத்தவரை, அந்த பட்ஜெட் கேரியர் தற்போது ஈரானிய வான்வெளியை அதன் பயணங்களுக்கு பயன்படுத்துவதில்லை   என்றது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.