கோலாலம்பூர், ஏப் 9: மெட்டா மற்றும் டிக்டாக் ஆகியவை 13 வயதுக்குட்பட்ட
குழந்தைகளுக்கான இணையப் பாதுகாப்பு குறித்து ஒத்துழைப்பு வழங்கும்.
இணைய சூதாட்டம், மோசடிகள், போலிச் செய்திகள் மற்றும் 3R (இனம், மதம் மற்றும்
அரசு) போன்ற குற்றவியல் உள்ளடக்கங்களைக் கண்காணிப்பது தொடர்பாக நேற்று
நடந்த விவாதத்தில் இந்த உடன்பாடு எட்டப் பட்டதாகத் தகவல் தொடர்பு அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.
மேலும், மலேசியாவில் சமூக ஊடக தளங்களின் சட்டங்கள் மற்றும் இயக்க
வழிகாட்டுதல்களை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்கள் குறித்தும் இரு
தளங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது.
அனைவருக்கும் இணையத்தின் உற்பத்தி, இணக்கமான மற்றும் பாதுகாப்பான
பயன்பாட்டை உறுதி செய்யும் அதே வேளையில், மலேசியர்களின் பேச்சு உரிமைக்கு
உத்தரவாதம் அளிக்கும் மடாணி அரசாங்கத்தின் உறுதிப் பாட்டிற்கு இணங்கும் வகையில்
இந்நடவடிக்கை அமைந்துள்ளது என்று அவர் முகநூலில் ஒரு பதிவில் கூறினார்.
முன்னதாக, ஃபஹ்மி தகவல் தொடர்பு அமைச்சகம், தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா
கமிஷன் (MCMC) மற்றும் பல ஏஜென்சிகள் இணையப் பாதுகாப்பு அம்சங்களைப்
பற்றி விவாதிக்க மெட்டாவுடன் ஒரு சந்திப்பை நடத்தும் என்று தெரிவித்தார்.
- பெர்னாமா


