இந்த வழக்கு அன்றைய தினம் காலை 9.00 மணிக்கு மாஜிஸ்திரேட் முகமது ரெட்ஸா அசார் ரசாலி முன்னிலையில் விசாரணைக்கு வரும் என்று குற்றஞ்சாட்டப்பட்ட நபரான வி.நாதனின் (வயது 37) வழக்கறிஞர் சிவானந்தன் ராகவன் கூறினார்.
இந்த வழக்கை ஜூன் 7 ஆம் தேதி நடத்த நீதிமன்றம் முன்பு தேதி குறிப்பிடப்பட்டிருந்தது, எனினு
கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி இரவு 10.02 மணிக்கு ஜாலான் செத்தியா டாகாங் ஏ.எச். யு13/ஏ.எச். செத்தியா ஆலமில் உள்ள ஒரு ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் 32 வயதான மாவிகா லும்மை என்றப் பெண்ணை கொலை செய்ததாக நாதன் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் மரண தண்டனை வழங்கவும் மரண தண்டனை வழங்காத பட்சத்தில் 40 ஆண்டுகள் வரையிலான சிறை மற்றும் 12 பிரம்படி வழங்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் 302 பிரிவின் அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


