கோலாலம்பூர், ஏப் 3 - கே.கே.சூப்பர்மார்ட் & சூப்பர்ஸ்டோர் குழுமத்தின் நிறுவனரும் நிர்வாகத் தலைவருமான டத்தோஸ்ரீ டாக்டர் சாய் கீ கான் மாட்சிமை தங்கிய பேரரசர் சுலதான் இப்ராஹிமை இன்று இஸ்தானா நெகாராவில் சந்தித்தார்.
அந்த 15 திமிட சந்திப்பின்போது, தனது கடையில் அல்லா பெயரைக் கொண்ட காலுறைகள் விற்கப்பட்ட விவகாரம் தொடர்பில் பேரரசரிடமும் அனைத்து முஸ்லிம்களிடமும் சாய் மன்னிப்பு கோரியதாக சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருப்பதை உறுதி செய்ய
விற்கப்படும் பொருட்கள், குறிப்பாக இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் குறித்து கே.கே.மார்ட் உட்பட அனைத்து தரப்பினரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று சுல்தான் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.
அனைத்து தரப்பினரும் அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். இதுவே எனது கடைசி நிறைவூட்டலாக இருக்கும் என நான் நம்புகிறேன், என்று சுல்தான் இப்ராஹிம் அரச பத்திரிகை அலுவலகத்திடம கூறினார்.
எந்தவொரு தரப்பினரும் பிறரை தூண்டிவிடுவது உள்ளிட்ட நோக்கங்களுக்கு இந்த விவகாரத்தை தஙகளுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது என்பதை மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறேன். இந்தப் பிரச்சனை நீடிப்பதைக் காண நான் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.


