NATIONAL

 ஊடகப் பயிற்சியாளர்கள் மற்றும் மாநில அரசு துணை நிறுவனங்களுடன் நோன்பு துறப்பு விழா

3 ஏப்ரல் 2024, 3:45 AM
 ஊடகப் பயிற்சியாளர்கள் மற்றும் மாநில அரசு துணை நிறுவனங்களுடன் நோன்பு துறப்பு விழா

ஷா ஆலம், ஏப் 3: கடந்த திங்கட்கிழமை ஊடகப் பயிற்சியாளர்கள் மற்றும் எம்பிஐ உள்ளிட்ட மாநில அரசு துணை நிறுவனங்களுடன் நோன்பு துறப்பு விழாவில் டத்தோ மந்திரி புசார் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் சுமார் 300 விருந்தினர்கள் கலந்து கொண்டனர். இது ஒரு ஆண்டு விழா என்றும், கோவிட்-19 உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் காரணமாக சமீபத்திய ஆண்டுகளில் இதனை ஏற்பாடு செய்ய முடியவில்லை என்றும் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

"இது ஊடக பயிற்சியாளர்கள் மற்றும் துணை நிறுவனங்களுக்கான ஆதரவின் அடையாளம் ஆகும். அனைவரின் பங்கையும் பாராட்டுவதைத் தவிர, இதுபோன்ற விழா சகோதரத்துவ உணர்வை வளர்க்கும்" என்று அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வில் போது அவர் கூறினார்.

இந்நிகழ்வில் எம்பிஐ நிர்வாக அதிகாரி சாய்போல்யாசன் மாட் யூசோப், மீடியா சிலாங்கூர் தலைமை அதிகாரி முகமட் ஃபரீத் அஷாரி மற்றும் பெர்மோடாலன் நெகிரி சிலாங்கூர் தலைமை செயல் அதிகாரி ராஜா அகமட் ஷஹ்ரிர் இஸ்கண்டார் ராஜா சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சமூகம் இப்போது அதிக ஆர்வத்தைக் கொண்டிருப்பதால், சவால்களுக்கு எப்போதும் தயாராக இருக்குமாறு ஊடக துணை நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளுக்கு அமிருடின் நினைவூட்டினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.