NATIONAL

மக்களின் அடிப்படைத் தேவைகளை விற்பனை மற்றும் சேவை வரி அதிகரிப்பு உள்ளடகவில்லை

26 மார்ச் 2024, 6:52 AM
மக்களின் அடிப்படைத் தேவைகளை விற்பனை மற்றும் சேவை வரி அதிகரிப்பு உள்ளடகவில்லை

ஷா ஆலம், மார்ச் 26: மார்ச் 1 முதல் விற்பனை மற்றும் சேவை வரி (எஸ்எஸ்டி) விகிதத்தை 6 முதல் 8 சதவீதமாக உயர்த்துவது மக்களின் அடிப்படைத் தேவைகளை உள்ளடகவில்லை என்று பிரதமர் கூறினார்.

இந்த அதிகரிப்பு, விருப்பமான சேவைகள் தொடர்பான நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்துகிறது என்று மக்களவையில் அமர்வில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் விளக்கினார்.

"உணவு, பானங்கள் மற்றும் தொலைத்தொடர்பு ஆகியவைற்றின் வரி அதிகரிக்கப்படவில்லை. அவை ஆறு சதவீதமாகவே உள்ளது.

"நீர் மற்றும் பெட்ரோல் போன்ற பயன்பாட்டுச் செலவுகளும் சேவை அல்லது விற்பனை வரிக்கு உட்பட்டவை அல்ல. இது தெளிவாக இருக்க வேண்டும், ஏனென்றால் நிறைய குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன," என்று இன்றைய கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

வரிக் கொள்கையின் மாற்றம் பணவீக்க விகிதத்தில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், பிரதமரின் கூற்றுப்படி, இதன் மூலம் எதிர்பார்க்கப்படும் RM3 பில்லியன் வருவாயுடன் ஒப்பிடுகையில் 0.2 சதவீதம் பெரியதாக இல்லை.

பல விதிவிலக்குகள் வழங்கப்பட்டுள்ள பொருளாதாரத்தில் உள்ளடங்கிய சேவைகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில், வரியின் 41 சதவிகிதம் சிறியது என்றும் அவர் கூறினார்.

"வரிவிலக்குகள் - கல்வி, சுகாதாரம், தரை மற்றும் கடல் பயணிகள் போக்குவரத்து, சபா மற்றும் சரவாக் விமான பயணிகள் போக்குவரத்து, குடியிருப்பு வீடு வாடகை மற்றும் பிறவற்றையும் உள்ளடக்கியது" என்று அவர் கூறினார்.

``Deficit`` குறைக்கும் அதே வேளையில், நாட்டின் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்தும் அரசின் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கடந்த பட்ஜெட்டில் புதிய கட்டண உயர்வு அறிவிக்கப் பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.