NATIONAL

மலாய் மொழி தேசிய மொழியாகத் தொடர்ந்து பராமரிக்கப்படும்

14 மார்ச் 2024, 6:41 AM
மலாய் மொழி தேசிய மொழியாகத் தொடர்ந்து பராமரிக்கப்படும்

ஷா ஆலம், மார்ச் 14: மலாய் மொழியின் தேசிய மொழி என்ற அந்தஸ்தைத் தொடர்ந்து கண்ணியப்படுத்தி, பராமரிக்கவும் அரசு உறுதியாக உள்ளது.

கல்வி அமைச்சர் தலைமையில் தேசிய மொழி அமலாக்கக் குழு ஒன்றை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகள் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

"இந்தக் குழு அனைத்து அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளால் உருவாக்கப்பட்டுள்ளது. அவை தேசிய மொழியின் பயன்பாட்டை அனைத்து மட்டங்களிலும் உள்ள அரசு துறைகள், முகமைகள் மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் துறைகள் பயன்படுத்துவதை கண்காணிக்கின்றன.

“நான் கல்வி அமைச்சராக இருக்கும் வரை, மலேசியாவில் மலாய் மொழி எடுக்கப்படாது, `` என்று அவர் உறுதியளித்தார்.

"மலாய் மொழியை மேம்படுத்தவும், கண்ணியப் படுத்தவும் திட்டங்கள் மற்றும் முன் முயற்சிகளுக்கு முழு கவனம் செலுத்துமாறு மொழி மற்றும் நூலகக் கழகத்திற்கு (DBP) நான் உத்தரவிட்டுள்ளேன் என நேற்று மக்களவை அமர்வில் ஃபத்லினா சிடெக் கூறினார்.

கல்வி அமைச்சின் மட்டத்தில், அனைத்து குழுவிற்கும் மலாய் மொழி முக்கியமான ஒன்றாகும்.

"நமது குழந்தைகள் மலாய் மொழி பேசுவதை உறுதி செய்வதற்காக இது மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்தில் தேசிய மொழி நட்சத்திர மதிப்பீடு அமைப்பு உள்ளது. இது பொதுத் துறைக்கான தேசிய மொழியின் பயன்பாட்டின் நிலை மற்றும் தரத்தை மதிப்பிடுகிறது.

"இந்த மதிப்பீட்டு முறையானது வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சகம், ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள உள்ளூர் அதிகாரசபைகள் (பிபிடி) மற்றும் பேங்க் நெகாரா மலேசியாவுடன் இணைந்து செயல்படுத்தப்படும்" என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.