கோலாலம்பூர், மார்ச் 10- இங்குள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் ஆடம்பர
அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புதிதாக
பிறந்த குழந்தையின் உடலை போலீசார் நேற்று கைப்பற்றினர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீ
பெட்டாலிங் போலீஸ் நிலையம் பொது மக்களிடமிருந்து புகாரைப்
பெற்றதாக பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ
மஷாரிமான் கூ முகமது கூறினார்.
மிக உயரத்திலிருந்து வீசப்பட்டதால் அக்குழந்தையின் தலை உடைந்து
சிதறியுள்ளது. தொப்புள் கொடியுடன் காணப்பட்டதால் அக்குழந்தை புதிதாக
பிறந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று அவர் அறிக்கை
ஒன்றில் தெரிவித்தார்.








