ECONOMY

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீசப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்

10 மார்ச் 2024, 4:28 AM
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீசப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் மீட்டனர்

கோலாலம்பூர், மார்ச் 10- இங்குள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் ஆடம்பர

அடுக்குமாடி குடியிருப்பிலிருந்து வீசப்பட்டதாக சந்தேகிக்கப்படும் புதிதாக

பிறந்த குழந்தையின் உடலை போலீசார் நேற்று கைப்பற்றினர்.

இந்த சம்பவம் தொடர்பில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் ஸ்ரீ

பெட்டாலிங் போலீஸ் நிலையம் பொது மக்களிடமிருந்து புகாரைப்

பெற்றதாக பிரீக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி கூ

மஷாரிமான் கூ முகமது கூறினார்.

மிக உயரத்திலிருந்து வீசப்பட்டதால் அக்குழந்தையின் தலை உடைந்து

சிதறியுள்ளது. தொப்புள் கொடியுடன் காணப்பட்டதால் அக்குழந்தை புதிதாக

பிறந்திருக்கலாம் என நாங்கள் சந்தேகிக்கிறோம் என்று அவர் அறிக்கை

ஒன்றில் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.