NATIONAL

2020 முதல் 107,716 இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

4 மார்ச் 2024, 8:55 AM
2020 முதல் 107,716 இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன

ஷா ஆலம், மார்ச் 4: 2020  முதல்  2023 க்கு இடையில் மொத்தம்   3.2 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள  107,716 இணைய மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று பிரதமர் துறை (சட்டம்) துணை அமைச்சர் கூறினார்.

சிண்டிகேட்டுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தொலைபேசி எண்களை கண்காணிப்பது உட்பட, சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் விரிவான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்று எம் குலசேகரன் வலியுறுத்தினார்.

"இந்த ஆண்டு ஜனவரி வரை, மொத்தம் 131 தொலைப்பேசி எண்கள் இணைய மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டதால் துண்டிக்கப்பட்டன. அதே நேரத்தில் 93 சந்தேகத்திற்குரிய எண்கள் தடுக்கப்பட்டன.

"பொதுமக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளைத் தொடர்வதற்கு முன் சரிபார்க்க வழிகாட்டியாகக் காவல்துறை சோதனை அமைப்பிலும் இந்த எண் பதிவு செய்யப்படும்," என்று அவர் கூறினார்.

இன்று மக்களவையில் நடைபெற்ற வாய்மொழி கேள்வி அமர்வில் கெப்பாலா பத்தாஸ் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சித்தி மஸ்துரா முகமாட்டின் கேள்விக்குப் பதிலளிக்க அவர் இவ்வாறு கூறினார்.

இதற்கிடையில், டிஜிட்டல் பாதுகாப்பின் அளவை அதிகரிக்கவும், இணைய மோசடியை எதிர்த்துப் போராடவும் அரசாங்கம் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி வருவதாகக் குலசேகரன் தெரிவித்தார்.

"வங்கிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். வங்கி நடவடிக்கை எடுப்பதைத் தவிர்க்க முடியாது. இந்த விஷயத்தை எதிர்கொண்டால், சம்பந்தப்பட்ட ஏஜென்சியைப் பார்க்கவும்," என்று அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.