NATIONAL

ரூமா சிலாங்கூர் கூ மோரிப் திட்டம் எதிர்வரும் டிசம்பரில் நிறைவடையும்

1 மார்ச் 2024, 9:51 AM
ரூமா சிலாங்கூர் கூ மோரிப் திட்டம் எதிர்வரும் டிசம்பரில் நிறைவடையும்

ஷா ஆலம், மார்ச் 1: தாமதமாகி வரும் ரூமா சிலாங்கூர் கூ மோரிப் ஆங்குன் குடியிருப்பு, கோலா லங்காட், திட்டம் எதிர்வரும் டிசம்பரில் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசுடன் தொடர்புடைய திட்டத்தின் கட்டுமானத்தின் முன்னேற்றத்தைக் கண்காணிக்க தொடர் கூட்டங்கள் மற்றும் தள வருகைகள் நடத்தப்பட்டன என வீட்டமைப்பு ஆட்சிகுழு உறுப்பினர் போர்ஹான் அமன் ஷா கூறினார்.

"வங்கி உத்தரவாதம்' நிதியைச் செலுத்துவதில் சிக்கல் (டெவலப்பர்கள்) இருப்பதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. முதலில் அவர்கள் RM18 மில்லியன் செலுத்த வேண்டியிருந்தது.

"இருப்பினும், டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களின் விருப்பப்படி, மாநில அரசு நெகிழ்வுத்தன்மையை அளிக்கிறது.

"கணிசமான நிதியுடன் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கும் புதிய முதலீட்டாளர்கள் உள்ளனர். பணி தொடர்ந்து நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நிறுவனத்தின் உயர் நிர்வாகமும் மாற்றப்பட்டது," என்று அவர் கூறினார்.

இன்று நடந்த சிலாங்கூர் மாநில சட்டமன்ற (டிஎன்எஸ்) அமர்வில் ரூமா சிலாங்கூர் கூ மோரிப் குறித்து மோரிப் மாநில சட்டமன்ற உறுப்பினர் (ஏடிஎன்) ரோஸ்னிசான் அஹ்மட்டின் கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்தார்.

முன்னதாக, உள்ளூராட்சி அபிவிருத்தி அமைச்சின் (கேபிகேடி) தலையீட்டிற்கு இந்தப் பிரச்சனை கொண்டுவரப்பட்டுள்ளதாக அமிருடின் தெரிவித்தார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.