NATIONAL

டாக்சி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பங்களிப்பு முழுமையாகப் பெறுவார்கள்

23 பிப்ரவரி 2024, 9:55 AM
டாக்சி மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் பங்களிப்பு முழுமையாகப் பெறுவார்கள்

புத்ராஜெயா, பிப் 23: அடுத்த மாதம் முதல், நாட்டில் உள்ள 35,000 டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் 18,000 பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சமூகப் பாதுகாப்பு அமைப்பின் (சொக்சோ) பங்களிப்பை முழுமையாகப் பெறுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பங்களிப்பில் 90 சதவீதம் நிதி அமைச்சகத்தின் ஒதுக்கீட்டின் மூலம் நிதியளிக்கப்படும் என்றும் மீதமுள்ள 10 சதவீதம் ஒரு வருட காலத்திற்கு மடாணி போக்குவரத்து அமைச்சகத்தால் செலுத்தப்படும் என்றும் செய்தியாளர் கூட்டத்தில் லோக் கூறினார்.

"டாக்சி ஓட்டுநர்கள், இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் மற்றும் பலவற்றிற்கு 90 சதவிகிதம் வரை பங்களிக்க நிதி அமைச்சகம் சொகேசோவுக்கு RM100 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.

அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதாவது விபத்து ஏற்பட்டால், இத்திட்டம் அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவும் என்று அவர் கூறினார்.

இத்திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து சமூகப் பாதுகாப்பு அமைப்பின் உடன் விவாதித்ததாக லோக் கூறினார். மேலும், பொது போக்குவரத்து நிறுவனம் (APAD) அவர்களின் தரவுத்தளத்தில் உள்ள ஓட்டுனர்களின் பட்டியலை சரிபார்ப்பதற்காக சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கு சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

"இந்த மார்ச் மாதத்தில் இத்திட்டத்தை தொடங்க முடியும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம், அதாவது டாக்ஸி ஓட்டுநர்கள் மற்றும் பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் ஒரு வருடத்திற்கு ஒரு சென் கூட பங்களிக்க வேண்டியதில்லை, அவர்கள் தங்கள் பெயரைப் பதிவு செய்தால் போதும்.

இதற்கு முன் பதிவு செய்திருந்தால், அதற்கு பங்களிப்பு சீட்டை வழங்குவோம்,'' என்றார்.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.