பாலிக் பூலாவ், பிப் 20: நேற்று, தெலுக் பஹாங்கில் உள்ள பினாங்கு தேசிய பூங்காவில் நடைபயணம் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர் எட்டு மணி நேரத்திற்கும் மேலாகக் காணாமல் போயிருந்தார்.
யோன்ஸ் ஒவ்காலி (37) என்பவரிடமிருந்து மாலை 6.07 மணியளவில் அவர் தொலைந்து விட்டதாகத் தங்களுக்கு அவசர அழைப்பு வந்ததாக மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் மாநில செயல்பாட்டு மையத்தின் (PGO) செய்தித் தொடர்பாளர் கூறினார்.
"அதைத் தொடர்ந்து, தீயணைப்புத் துறையினர் மலை ஏறுதல் மற்றும் படகு உதவி மூலம் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்தனர்.
பாதிக்கப்பட்டவர், அதிகாலை 1.22 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டு, மேல் பரிசோதனைக்காகப் பினாங்கு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
பாலிக் பூலாவ் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 17 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் மற்றும் இன்று காலை 4.58 மணிக்குத் தேடுதல் நடவடிக்கை முடிவடைந்தது.
– பெர்னாமா




