NATIONAL

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 175 போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் நியமனம்

6 பிப்ரவரி 2024, 9:44 AM
போக்குவரத்து நெரிசலை சமாளிக்க 175 போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் நியமனம்

அம்பாங் ஜெயா, பிப் 6: கடந்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் மொத்தம் 175 அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) அமலாக்க  அதிகாரிகள் போக்குவரத்து கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டனர்.

போக்குவரத்து விதிமீறல்களை மிகவும் திறம்பட கையாள்வதை சாலைப் போக்குவரத்துச் சட்டம் 1987 (சட்டம் 333) இன் கீழ் இது செயல்படுத்தப் படுவதை  நோக்கமாகக் கொண்டுள்ளது   இந்த நியமனம்.

"போக்குவரத்து அதிகாரிகள்  வாகன சக்கரங்களை பூட்டுவது,, மற்றும் சாலை அபராதங்களை விதித்தல் போன்ற பல விதிகளை அமல்படுத்துவார்கள்" என்று டாக்டர் அனி அஹ்மட் கூறினார்.

இங்குள்ள எம்பிஏஜே கன்வென்ஷன் சென்டரில் எம்பிஏஜே போக்குவரத்து கண்காணிப்பாளரின் துவக்க விழாவிற்கு டத்தோ மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமை தாங்கினார்.

போக்குவரத்து கண்காணிப்பாளர்கள் நியமனம் போக்குவரத்து நெரிசலை 20 சதவீதம் வரை குறைக்க உதவுகிறது.

அவர்கள் கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாகத் தங்களின் கடமைகளைச் செய்யத் தொடங்கியதிலிருந்து 700 போக்குவரத்து குற்ற அபராதங்களை எம்பிஏஜே வழங்கியுள்ளது என்று அவர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.