NATIONAL

பள்ளி உதவித்தொகையில் பிடித்தம் செய்ததற்கான புகார்கள் இல்லை

1 பிப்ரவரி 2024, 9:28 AM
பள்ளி உதவித்தொகையில் பிடித்தம் செய்ததற்கான புகார்கள் இல்லை

ஈப்போ, பிப் 1: ஜனவரி 10ம் தேதி முதல் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்ட பள்ளி உதவித்தொகை (பிஏபி) குறைவாக வழங்கியதன் அல்லது  பிடித்தம் செய்தது  தொடர்பான புகார்கள் அல்லது அறிக்கைகள் எதுவும் பெறப்படவில்லை.

பள்ளிக்குத் தயாராவதை எளிதாக்கும் நோக்கத்தில் ஒரு மாணவருக்கு RM150 வழங்கப்பட்டது என்று கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளதாகத் துணைக் கல்வி அமைச்சர் வாங் கா வோ கூறினார்.

"முன்னதாகப் உதவி தொகையிலிருந்து சில குறைப்புகள் இருந்ததாகப் புகார்கள் வந்தன என கல்வி அமைச்சகம் தெரிவித்தது. அவை கட்டணம் செலுத்துதல் மற்றும் பலவற்றின் அடிப்படையில் விதிக்கப்பட்டன என தெரிவிக்கப்பட்டது.

"இருப்பினும், இந்த ஆண்டில் எந்த புகாரும் வரவில்லை, மேலும் மாணவர்களுக்கான RM150 உதவி தொகை பெற்றோர் அல்லது மாணவர்களைச் சென்றடைய வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் தெளிவான செய்தியை வழங்கியுள்ளோம்," என்று அவர் கூறினார்.

இன்று யுக் சோய் தேசிய இடைநிலைப் பள்ளியில் பேராக் மாநில உதவி தொகை 2024இன் காசோலை வழங்கும் விழாவுக்கு பின்னர் செய்தியாளர் சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

மாநிலத்தில் உள்ள 1,104 பள்ளிகளில் உள்ள 325,162 மாணவர்களுக்கு விநியோகிக்க RM48.8 மில்லியன் உதவி தொகையைப் பேராக் கல்வி இயக்குனர் டத்தோ முகமது ஃபௌசி மஹ்சோனிடம் வோங் வழங்கினார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 16 ஆம் தேதி, பள்ளி உதவி தொகைக்கு RM788 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிவித்தது, இதன் மூலம் நாடு முழுவதும் 5.25 மில்லியன் மாணவர்கள் பயனடைந்தனர்.

மாணவர்களின் பெற்றோருக்கு பணமாகவோ அல்லது அவர்களது கணக்குகளில் சேர்க்கப் படுவதன் மூலமாகவோ ஒருமுறை செலுத்தப்படும் உதவித்தொகை பள்ளி மூலம் வழங்கப்படுகிறது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.