NATIONAL

திரங்கானு மாநிலத்தில் 463 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தொடர்ந்து அடைக்கலம்

1 பிப்ரவரி 2024, 4:18 AM
திரங்கானு மாநிலத்தில் 463 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தொடர்ந்து அடைக்கலம்

கோல திரங்கானு, பிப் 1- திரங்கானு மாநிலத்தில் வெள்ளத்தில்

பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. இன்று

காலை 8.00 மணி நிலவரப்படி டுங்குன் மாவட்டத்திலுள்ள இரு துயர்

துடைப்பு மையங்களில் 149 குடும்பங்களைச் சேர்ந்த 463 பேர் அடைக்கலம்

நாடியுள்ளனர்.

கம்போங் பாசீர் ராஜாவிலுள்ள துயர் துடைப்பு மையத்தில் 88

குடும்பங்களைச் சேர்ந்த 237 பேரும் கம்போங் சுக்கோர் சமூக

மண்டபத்தில் 61 குடும்பங்களைச் சேர்ந்த 226 பேரும் தங்கியுள்ளதாகத்

திரங்கானு மாநிலப் பேரிடர் மேலாண்மை செயல்குழு கூறியது.

வெள்ளம் முழுமையாக வடிந்து வானிலையும் தெளிவாக இருந்த

போதிலும் வீடுகள் மற்றும் பொருள்களை துப்புரவு செய்யும் பணிகளை

மேற்கொள்ளும் காரணத்தால் பாதிக்கப்பட்ட பலர் இன்னும் துயர் துடைப்பு

மையங்களில் தங்கியுள்ளதாக மலேசிய பொது தற்காப்பு படையின்

(ஏ.பி.எம்.) திரங்கானு மாநில இயக்குநர் லெப்டிணன்ட் கர்னல் முகமது

ரோஸ்மான் அப்துல்லா கூறினார்.

வீடுகளைச் சுத்தம் செய்யும் பணியில் அவர்களில் பலர் இன்னும் ஈடுபட்டு

வருகின்றனர். எனினும், அவர்கள் இன்று தொடங்கி கட்டங் கட்டமாக வீடு

திரும்பவுள்ளனர் என்றார் அவர்.

எதிர்வரும் சனிக்கிழமைக்குள் இவ்விரு துயர் துடைப்பு மையங்களும்

மூடப்படும் என அவர் சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.