ECONOMY

கோழி தீவனமாக மாநிலம் 118 டன் தானிய சோளத்தை அறுவடை செய்தது.

21 ஜனவரி 2024, 10:21 AM
கோழி தீவனமாக மாநிலம் 118 டன் தானிய சோளத்தை அறுவடை செய்தது.
கோழி தீவனமாக மாநிலம் 118 டன் தானிய சோளத்தை அறுவடை செய்தது.

கோலா லங்காட், ஜனவரி 21: சிலாங்கூர் வேளாண்மை வளர்ச்சிக் கழகம் (பி கே பி எஸ்) மூலம் மாநில அரசு கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட முதல் 118 டன் உயர்தர தானிய சோளத்தை இன்று அறுவடை செய்தது.

இங்குள்ள கோல லங்காட் செலாத்தானில் மொத்தமுள்ள 121 ஹெக்டர் பண்ணைகளில் முதல் அறுவடையாக 16.9 ஹெக்டர் பரப்பளவு நிலத்தில் கிடைத்த உற்பத்தியாக சிலாங்கூர் வேளாண்மை ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம்  தெரிவித்தார்.

ஜனவரி 21, 2024 அன்று  கோல லங்காட் செலாத்தான் பண்ணையில் பி கே பி எஸ் வணிக தானிய சோளம் அறுவடை விழாவின் செய்தியாளர் சந்திப்பின் போது விவசாய EXCO இஷாம் ஹாஷிம்  "வரலாற்றில் முதன்முறையாக, சிலாங்கூர் கரி நிலத்தில் தானிய சோளத்தை பயிரிட்டது, இது PKPS உடன் இணைந்து சிலாங்கூர் வேளாண் உருமாற்றத் திட்டத்தின்  முயற்சியாகும்  என்றார்.

தீவனத்தில் முக்கிய மூலப்பொருளாக இருப்பதால் இந்த சாகுபடியை ஒரு முக்கிய நிகழ்ச்சி நிரலாக வைத்துள்ளதாக கூறினார்.

"இவ்வாறு, இந்த முதல் கட்ட அறுவடைக்கு 118 டன்கள் விளைபொருட்கள் ஒரு டன்னுக்கு தோராயமாக RM970 செலவில் பெறப்பட்டது, மொத்த இறக்குமதி விலையான டன் ஒன்றுக்கு RM1,200 (போக்குவரத்து உட்பட) ஒப்பிடும்போது" என்று அவர் கூறினார்.

பண்ணையில் PKPS வணிக தானிய மக்காச்சோளம் முதல் அறுவடை விழாவிற்குப் பிறகு சந்தித்த இஷாம், சிலாங்கூரில் கோழியின் விலையை ஸ்திரப்படுத்த விரும்பும் அரசாங்கத்தின் தலையீடு திட்டத்தின் நோக்கத்தை அடைவதற்கான முதல் படி பயிர் அறுவடை என்று கூறினார்.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 21 ஆம் தேதி கோல லங்காட் செலாத்தான் ஃபார்மில், நடைபெற்ற பிகேபிஎஸ் வணிக தானிய சோளம் அறுவடை விழாவின் போது, பிஜேபி எஸ் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமட் ராஸியுடன் விவசாய எக்ஸ்கோ இஷாம் ஹாஷிம் மக்காச்சோளம் பறித்தார்கள்

"இறக்குமதியை சார்ந்திருக்கும்  தவிடு விலை மற்றும் கோழியின் விற்பனை விலை, குறிப்பாக பி கே பி எஸ் மூலம் விற்கப்படும் கோழிகளின் விற்பனை விலை போன்ற விநியோகச் சங்கிலியில் நிச்சயமாக சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என்று அவர் கூறினார்.

சிலாங்கூருக்கு உள்ளேயும் வெளியேயும் நிலத்தின் சாத்தியக்கூறுகளை கவனிப்பதோடு கூடுதலாக பயிர்களை விரிவுபடுத்தவும் PKPS திட்டமிட்டுள்ளதாக இஷாம் கூறினார்.

"இந்தப் பயிருக்கு அதிக கிராக்கி உள்ளது, நமது மக்காச்சோளம் (தானியம்) இன்னும் செடியில்  இருக்கிறது., ஏற்கனவே தேவை உள்ளது, மலேசியாவில் மக்காச்சோளத்தின் விளைச்சல் மூன்று சதவீதம் கூட இல்லை," என்று அவர் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.