NATIONAL

வாகனத்தைச் செலுத்தி  ஆசிரியர்கள் மரணத்திற்கு காரணமானவர் நீதிமன்றத்தில் ஆஜர்

17 ஜனவரி 2024, 9:01 AM
வாகனத்தைச் செலுத்தி  ஆசிரியர்கள் மரணத்திற்கு காரணமானவர் நீதிமன்றத்தில் ஆஜர்

பட்டர்வொர்த், ஜன 17: கடந்த ஆண்டு டிசம்பரில் குடிபோதையில் வாகனத்தை செலுத்தி இரண்டு ஆசிரியர்களின் மரணத்திற்குக் காரணமான பொறியியலாளர் ஒருவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று ஆஜர் படுத்தப்பட்டார்.

தியோ ஜோ லியோங் (47), மாஜிஸ்திரேட் சித்தி சுலைக்கா நோர்டின்@கானி முன் குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்ட பின்னர், அதை ஏற்க மறுத்தார்.

2023 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி அதிகாலை 2.30 மணியளவில் ஜாலான் பெர்மாதாங் பாரு அருகே நிகழ்ந்த விபத்தில் தியோவின் உடலில் மதுவின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருந்த நிலையில் வாகனம் ஓட்டியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டப் பிரிவு 44(1)(b) இன் கீழ் தியோ மீது குற்றம் சாட்டப்பட்டது.

தியோவிற்குத் துணை அரசு வக்கீல் நுரமீரா ஷாருல் அஸ்ரின் ஒரு உத்தரவாதத்துடன் RM10,000 ஜாமீன் வழங்கினார். தனித்து வாழும் தந்தையான தியோ தனது வயதான பெற்றோரை ஆதரிக்க வேண்டும் மற்றும் அவரின் மூன்று குழந்தைகள் இன்னும் பள்ளியில் பயின்று வருவது அடிப்படையில் குறைந்தபட்ச தொகையை வழக்கறிஞர் சி யு அந்தோணி கேட்டார்.

பின்னர், குற்றம் சாட்டப்பட்டவரை ஒரு உத்தரவாதத்துடன் RM8,000 பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதித்தது மற்றும் ஆவணம் சமர்ப்பிக்கும் தேதி மார்ச் 7 என நிர்ணயித்தது.

– பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.