தென்னிந்தியர்களின் பூர்வீகம் விவசாயம், அவர்கள் ஆடி மாதத்தில் விதைத்த பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்து பயன் அடையும் பருவமே தை மாதம் ஆகும். இந்த திருநாள் அன்று அனைவரது வீட்டிலும் அந்த அறுவடையில் கிடைத்த புதிய அரிசியை சர்க்கரை, பால், நெய் சேர்த்துப் புதுப் பானையில் இட்டுப் பொங்கல் செய்து சூரியனுக்கும் மாட்டுக்கும் படைத்து உண்டு மகிழும் விழாவே பொங்கல் விழாவாகும்.
பொங்கல் பண்டிகைக்கு முதல் நாளன்று கொண்டாடப்படுகிறது போகிப் பண்டிகை, பொங்களுக்கு பக்குவமான முது மொழியாக மட்டுமின்றி மனித குலத்திற்கு தேவையான முக்கியமான உபதேசமாகவும் விளங்குவது '' பழையன கழிதலும் புதியன புகுதலும்''’ தமிழர்களின் முதுமொழிகளில் ஒன்று. காலத்தே உதவாத, பயன்படாத, மேம்பாட்டுக்கு தடையாகும், வளர்ச்சிப் பாதையில் நடைபோட தடையாக உள்ள எதையும் தவிர்ப்பது நலம்.








