ECONOMY

பங்சரில் பிச்சை எடுத்த நான்கு குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டவர்களை குடிநுழைவுத்துறை கைது

13 ஜனவரி 2024, 4:41 AM
பங்சரில் பிச்சை எடுத்த நான்கு குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டவர்களை குடிநுழைவுத்துறை கைது

கோலாலம்பூர், ஜனவரி 13: இங்குள்ள பங்சார் மசூதியில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த நான்கு குழந்தைகள் உட்பட 10 வெளிநாட்டவர்களை  குடிநுழைவுத்  துறையினர் நேற்று மதியம் கைது செய்தனர்.

குடிநுழைவுத் துறையின் இயக்குநர் ஜெனரல் டத்தோ ரஸ்லின் ஜூசோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், சம்பந்தப்பட்ட பகுதியில் அடிக்கடி நிகழும் வெளி நாட்டவர்களிடம் பிச்சை எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் இருந்து புகார்கள் வந்ததை தொடர்ந்து, அன்று மதியம் 12.15 மணிக்கு தொடங்கிய நடவடிக்கையில் 13 நபர்கள் பரிசோதனை செய்யப்பட்டனர்.

குடிநுழைவுச் சட்டம் 1959/63 (சட்டம் 155) மற்றும் குடிவரவு விதிமுறைகள் 1963 ஆகியவற்றின் கீழ் இரண்டு வயது முதல் 41 வயது வரையிலான 10 வெளிநாட்டு பிச்சைக்காரர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப் பட்டனர்.

"கைது செய்யப்பட்ட மற்ற மூன்று நபர்கள் உள்ளூர் குடிமக்கள் என்பதால் விடுவிக்கப்பட்டனர்," என்று அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்களில் நான்கு குழந்தைகள் உட்பட மூன்று இந்தோனேசியர்கள் மற்றும் ஏழு மியான்மர் பிரஜைகள் அடங்குவர் என்று ரஸ்லின் கூறினார்.

அனைத்து வெளிநாட்டவர்களும் குடிவரவுச் சட்டம் 1959/63 (சட்டம் 155) பிரிவு 51(5)(b) இன் கீழ் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை மற்றும் மேலதிக நடவடிக்கைகளுக்காக Semenyih குடிநுழைவு டிப்போவில் வைக்கப் பட்டுள்ளனர் என்றார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.