குவாந்தான், ஜன. 9 - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பகாங் மாநில செயலாளரின் (SUK) அலுவலகத்தில் RM31,068 மதிப்பிலான பொய்யான பில்களை (உரிமைகோரல்) சமர்ப்பித்ததன் தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகளை பட்டறை உரிமையாளர் ஒருவர் இன்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் எதிர்கொண்டார்.
4WD வாகன உபரி பாகங்கள் மாற்றுவதற்காக RM11,154 மற்றும் RM19,914 பில்களை சமர்ப்பித்ததாக லீ கோக் சிங் (49) மீது குற்றம் சாட்டப்பட்டது, ஆனால், உண்மையில் அந்த வேலையை செய்யவில்லை.
அக்டோபர் 11 மற்றும் டிசம்பர் 15, 2021 ஆகிய தேதிகளில் பகாங் SUK அலுவலகமான விஸ்மா ஸ்ரீ பகாங்கில் இந்தக் குற்றம் நடந்ததாகக் கூறப்படுகிறது.
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009 இன் பிரிவு 18ன் கீழ் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதே சட்டத்தின் 24(2) பிரிவின் கீழ் தண்டனை வழங்கப்படும். இது 20 ஆண்டுகளுக்கு மிகாமல் சிறைத்தண்டனை மற்றும் RM10,000க்குக் குறையாத அபராதம் அல்லது ஏமாற்றிய பணத்தில் ஐந்து மடங்கு மதிப்பு என இதில் எது அதிகமோ, குற்றம் நிரூபிக்கப்பட்டால் அது விதிக்கப்படும்.
உத்தரவாதத்துடன் RM15,000 ஜாமீன் நிர்ணயித்தது மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் ஒவ்வொரு மாதமும் எம்ஏசிசி அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் மற்றும் வழக்கு முடிவடையும் வரை அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்ற அரசுத் தரப்பு கோரிக்கையை நீதிமன்றம் அனுமதித்தது.
- பெர்னாமா




